ஜெயமோகனுடைய இந்தியா? எது என்கிற கேள்வியுடன் சென்ற பதிவை நிறைவு செய்திருந்தேன். அவருடைய மனதில் நிழலாடும் இந்தியாவை நாம் ஒன்றும் தேடி பிடிக்க வேண்டியதில்லை,ஆனால் அதற்காக உட்கார்ந்து நேரத்தை செலவிட்டு இன்னொரு பதிவையும் எழுத வேண்டுமா என்கிற கேள்வி என்னுள் தொடர்ந்து எழுந்துகொண்டிருந்தது,அதற்கொன்றும் அவ்வளவு அவசியமில்லை என்ற முடிவிற்கும் வந்தேன்.
ஈழத்தில் இன்று ஒரு இன அழித்தொழிப்பு கொடும்போரை அதன் உச்சத்திற்கு கொண்டு சென்றுகொண்டிருக்கிறது சிங்கள இனவெறி பாசிச அரசு.ஈழத்தமிழ் மக்களின் பிணங்கள் குப்பைகளை போன்று கொன்று குவிக்கப்பட்டு வருகிறது. தப்பிப்பிழைத்தவர்களோ வாழ வழியின்றி அநாதைகளாய் காட்டிற்குள் தஞ்சம் புகுகின்றனர்.இப்படி ஒரு கொடூர சூழல் அங்கு நிலவுகிறது. இந்த இன அழித்தொழிப்பு யுத்தத்திற்கு 'நீதிகளால் கட்டுண்ட இந்திய அரசு' பண உதவியையும்,ஆயுத உதவியையும் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது.
மேலும் வாசியுங்கள் - ரேனுகா அஜிதா
No comments:
Post a Comment