Monday, December 1, 2008

அயோத்தி,கோயம்புத்தூர். குஜராத்,மும்பை… சோதனைச்சாலைகள்Xகுண்டு வெடிப்புகள்





இன்று இந்தியாவில் அதிலும் குறிப்பாக மும்பையில் உள்ள அனைவரின் பேச்சிலும் தீவிரவாதம் என்ற சொல் ஒரு முறையாவது உச்சரிக்கப்பட்டிருக்கும்,பல அப்பாவி இசுலாமியர்கள் வழக்கம் போல் புயலுக்குப்பின்னான சோகமாக விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படலாம். தாக்குதலில் இறந்த‌ இந்துக்களின்,இசுலாமியர்களின் சொந்தங்கள் கன‌த்த இதயத்தோடு நொடிகளை கடத்தலாம்.






புயல் போல் நடந்து முடிந்துவிட்ட‌ இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட இரு நூறு உயிர்கள் பலியாகியிருக்கிறது.ரயில் நிலையங்களில் நின்று இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இரையாகிப்போன அப்பாவி பயணிகளுக்கும்,ஒட்டலில் பணிபுரிந்த‌ பணியாளர்களுக்கும்,சமையல்காரர்களுக்கும்,இன்னும் இந்த தாக்குதலில் இறந்த அனைத்து அப்பாவி உழைக்கும் மக்களுக்கும் நாம் நமது ஆழ்ந்த இரங்களைத் தெரிவிப்போம்,அதே நேரத்தில் இந்த பயங்கரவாத தாக்குதலின் நுட்பமும்,வேகமும்,உயிரையே இழக்கும் ஆவேசமும் கூடியிருப்பதையும் இதற்கான காரணிகளை,உற்றுக்கண்னை,இதன் தோற்றுவாயை ‘நடுநிலையாளர்களுக்கு’ மீண்டும் ஒரு முறை நினைவூட்டுவதும்,இந்தியாவில் தொடரும் இந்த‌ பயங்கரவாதத்தின் வினை எது என்பதை பார்க்க வைப்பது அவசியமானது என்று கருதுகிறேன்.மற்ற‌ குண்டு வெடிப்புகள், தாக்குதல்கள் அனைத்தின் போதும் பீதியை கிளப்பி இந்து ம‌தவெறிக்கு தூபமிட்டு வெறியை கிளறிவிட்டுக்கொண்டிருந்த இந்திய புளுகுனி ஊடகங்கள் தற்போது கண்ணீரும் கம்பலையுமாக‌ அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்‌றன.இந்த தாக்குதல் சம்பத்திலிருந்து புதிதாக‌ எந்த பீதிகளையும் கிளப்பமுடியாமல் இந்தியாவையே தேசபக்த,இந்துமதவாத உணர்ச்சிகளுகுள் மூழ்கடிக்கும் செண்டிமென்ட் கட்டத்தை எட்டிவிட்டார்கள்.
மேலும் வாசியுங்கள்... ரேணுகாஅஜிதா&ஸ்டாலின்

Wednesday, November 5, 2008

இதாம்பா ஜெய‌மோக‌ன் அண்ணாச்சியின் இந்தியா !

ஜெயமோகனுடைய இந்தியா? எது என்கிற கேள்வியுடன் சென்ற பதிவை நிறைவு செய்திருந்தேன். அவருடைய மனதில் நிழலாடும் இந்தியாவை நாம் ஒன்றும் தேடி பிடிக்க வேண்டியதில்லை,ஆனால் அதற்காக உட்கார்ந்து நேரத்தை செலவிட்டு இன்னொரு பதிவையும் எழுத வேண்டுமா என்கிற கேள்வி என்னுள் தொடர்ந்து எழுந்துகொண்டிருந்தது,அதற்கொன்றும் அவ்வளவு அவசியமில்லை என்ற முடிவிற்கும் வந்தேன்.
ஈழத்தில் இன்று ஒரு இன அழித்தொழிப்பு கொடும்போரை அதன் உச்சத்திற்கு கொண்டு சென்றுகொண்டிருக்கிறது சிங்கள இனவெறி பாசிச அரசு.ஈழத்தமிழ் மக்களின் பிண‌ங்கள் குப்பைகளை போன்று கொன்று குவிக்கப்பட்டு வருகிறது. த‌ப்பிப்பிழைத்த‌வ‌ர்க‌ளோ வாழ‌ வ‌ழியின்றி அநாதைக‌ளாய் காட்டிற்குள் த‌ஞ்ச‌ம் புகுகின்ற‌ன‌ர்.இப்படி ஒரு கொடூர சூழல் அங்கு நிலவுகிறது. இந்த இன அழித்தொழிப்பு யுத்தத்திற்கு 'நீதிகளால் கட்டுண்ட இந்திய அரசு' பண உதவியையும்,ஆயுத உதவியையும் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது.

மேலும் வாசியுங்க‌ள் - ரேனுகா அஜிதா

Monday, October 27, 2008

ஜெயமோகனை போன்ற தேச பக்தர்களின் இந்தியா எது ?

இந்த நாட்டில் இருப்பதாக கூறப்படுகின்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கும்,வைத்திருந்தவர்களுக்கும், அவ்வாறு வைக்காதவர்களுக்கும் கடவுள் நம்பிக்கையை போல நம்பிக்கை வை, நம்பிக்கை வை என்று பிறர் மீது ஜனநாயகத்தை தள்ளித்தினித்து கவிழ்ப்பதன் மூலம் ஜனநாயகத்தை தூக்கி நிறுத்திவிட கனவு கானும் ஜனநாயகவாதிகளுக்கும் ஆக மொத்தத்தில் இந்திய ஜனநாயகத்தை கொண்டாடுபவர்களுக்கும் அதன் தோலை உரிப்பவர்களுக்கும் என அ‌னைவருக்கும் இந்த நாட்டில் ஜனநாயகம் ஊற்றெடுக்கும் பன்றித்தொழுவத்திலிருந்து பாய்ந்தோடி வடிந்து சொட்டும் பெருச்சாளிகள் புகும் சாக்கடை சந்துகள் வரை நிரம்பியிருப்பது 'சாட்சாத் ஜனநாயக பகவானே' என்பதில் மாறா நம்பிக்கை கொண்டுள்ள எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் ஒரு கட்டுரையை தந்துள்ளார்.

முன்குறிப்பு :
கட்டுரை உணர்வு சார்ந்ததாம், ஜெயமோகன் கூறியுள்ளார். முற்றிலும் உண்மை, எனவே தான் அவருடைய பக்கச்சாய்வும் அவரை பளீரென்று பச்சையாக காட்டிக்கொடுக்கிறது. உணர்ச்சிகள் அடிமனத்தில் கிட‌க்கும் உண்மைகளை காட்டிவிடும் என்பார்கள் அது ஜெ வினுடைய கட்டுரையின் இறுதி சொல் வரை கானக்கிடைக்கிற‌து. ஆனால் அவருடைய உணர்ச்சிகளை நாம் பொய் என்று சொல்லவில்லை மாறாக அவருடைய இந்த உணர்ச்சி இந்த நாட்டினுடைய உணர்ச்சி அல்ல, இந்த மக்களுடைய உணர்ச்சி அல்ல ஏனெனில் அவருக்குள் பொங்கிப்பிரவாகமெடுத்து இணையத்தின் வழியே கொட்டியோடிய இந்த உணர்ச்சிக்கான நியாயங்களை அவர் ஓரிடத்திலும் கூறவில்லை, தருக்கம் இல்லை, ஏனெனில் ஜெயமோக‌னுக்கு அவற்றிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நேரமில்லை, விருப்பமில்லை,மனமில்லை [பார்க்க‍ கடிதங்கள்] உண்மையான உணர்ச்சிக்கான நியாயம்,பெரும்பாண்மை மக்களின் நலனிலிருந்து எழும் உணர்ச்சிக்கான தருக்கம் ஆகியவை இயல்பாக வரும். உண்மைகளிலிருந்து எழும் மகிழ்ச்சி,துயரம் போன்ற பல வகையான உணர்ச்சிகள் அந்த உண்மை விவரங்களிலிருந்தே தன் உணர்ச்சிக்கான நியாயத்தை முன் வைக்கும்,தருக்கம் புரியும். ஆனால் ஆயிரம் பக்கம் இரண்டாயிரம் பக்கம் என்று கைகளாலும், கால்களாலும் எழுதும் ஓர் எழுத்தாளனுக்கு தன் பக்க நியாயத்தை நாலு பக்கம் கூட எழுத முடியவில்லை,ஆனால் அவரது உணர்ச்சிகளை புரிந்து கொண்டு எல்லோரும் தன்னைப்போலவே ஜெய்ஹிந்த் கோக்ஷம் மட்டும் போட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நியாயமும், உண்மையுமற்ற தன்னுடைய உணர்ச்சிகளுக்காக அது உண்மையா,பொய்யா,சரியா,தவறா என்று கூட பார்க்காமல் ஊரே கூடி அழ வேண்டும் அல்லது ஊரே கூடி சிரிக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது பக்கா மிடில் கிளாஸ் அரசியலாகும்.
continue read
Renuga-Ajitha and Stalin’s blog